பெருங்காமமாகி காதலுருகிறேன் கதை முழுமை..
தலைவன் ராசசிங்கன்
தலைவி ஏந்திழையாள்
வேல் க்ரூப்ஸ் ஆப் கம்பெனியின் சேர்.. கிட்டத்தட்ட அவன் எதிர் பார்த்ததை விட அதிகமாக கிடைத்து இருந்தது. வேகமாய் பரபரப்புடன் அதை முழுமையாக எடுத்து வாசித்துப் பார்த்தான்.
அவனது ஆர்வத்தை கண்டு முற்றும் முழுதுமாக உடைந்துப் போன ஏந்திழையாள்,
“என்னோட ஷேர்சும் உங்க பேருக்கு மாத்த சொல்லிட்டேன்” என்றாள் தகவலாய்.
ராசசிங்கன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“சோ பைனலி நீங்க கேட்ட அங்கீகாரம் இப்போ பிசினெஸ் சர்க்கில்ல கிடைச்சுடுச்சு இல்ல?” என்றாள் அமைதியாய்.
“ஆமாம்” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“சோ உங்க டீல் இதோட ம... See more
பெருங்காமமாகி காதலுருகிறேன் கதை முழுமை..
தலைவன் ராசசிங்கன்
தலைவி ஏந்திழையாள்
வேல் க்ரூப்ஸ் ஆப் கம்பெனியின் சேர்.. கிட்டத்தட்ட அவன் எதிர் பார்த்ததை விட அதிகமாக கிடைத்து இருந்தது. வேகமாய் பரபரப்புடன் அதை முழுமையாக எடுத்து வாசித்துப் பார்த்தான்.
அவனது ஆர்வத்தை கண்டு முற்றும் முழுதுமாக உடைந்துப் போன ஏந்திழையாள்,
“என்னோட ஷேர்சும் உங்க பேருக்கு மாத்த சொல்லிட்டேன்” என்றாள் தகவலாய்.
ராசசிங்கன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“சோ பைனலி நீங்க கேட்ட அங்கீகாரம் இப்போ பிசினெஸ் சர்க்கில்ல கிடைச்சுடுச்சு இல்ல?” என்றாள் அமைதியாய்.
“ஆமாம்” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“சோ உங்க டீல் இதோட முடிஞ்சிடுச்சு இல்லையா? நல்ல குடும்பத்து பெண்ணா பரம்பரை பரம்பரையா பிசினெஸ் செய்துட்டு இருக்கிற பெண்ணை கல்யாணம் பண்ணா உங்க மதிப்பு இன்னும் உயரும். அதை விட உங்க பிசினெஸ் இன்னும் பெருகும். எங்க கம்பெனில டையப் வச்சுக்க முயற்சி செய்து அது கிடைக்காம போனதுல வெகுண்டு போய் எங்க சேர்ஷை வாங்கிப்போட்டு நீங்களும் வேல் க்ரூப்ஸ்ல ஒன்னாப் பாட்ர்னர்னு இந்த உலகத்துக்கு காட்டணும். இதுக்காக தானே என்னை கல்யாணம் பண்ணிட்டிங்க?” என்று கேட்டாள் அடிபட்ட மனதுடன்.
ராசசிங்கன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “யா அப்கோர்ஸ்” என்றான் திமிராக.
“நீங்க கேட்ட எல்லாத்தையும் குடுத்துட்டேன்...” என்றாள் விரக்தியாக.
“சோ” என்று அவளை அவன் ஆழமாக பார்த்தான்.
“சோ நாம இதோட பிரிஞ்சுடுறது நல்லது” என்றாள் நெஞ்சை கவ்விய வேதனையுடன்.
“யாருக்கு” என்றான் கூர் விழிகள் இடுங்கியது அவள் மீது.
“என் பிள்ளைக்கு” என்றாள் அழுத்தமாய். அப்பொழுது தான் தன் கையில் வைத்திருந்த பொருளை பார்வை இட்டான். அது கற்பத்தை உறுதி பண்ணும் பேட். அதில் இரண்டு சிவப்பு கோடு இருக்க புரிந்துப் போனது அவனுக்கு.
தன் மனைவியின் மணி வயிற்றில் அவனது முத்து சிந்தாமல் சிதறாமல் உருக்கொண்டு இருக்கிறது என்று.
பெருமூச்சு விட்டவன் அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.
“ஏன் என்கிட்டே இருந்தா உன் பிள்ளைக்கு ஆகாதா?” என்று கேட்டான்.
விரக்தியுடன் சிரித்தவள்,
“என் கழுத்துல தாலி கட்டுனது இந்த ஷேர்ஸ் க்காக தானே. அது தான் குடுத்துட்டனே... பிள்ளைக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... வேல் க்ரூப்ஸ் மருமகன் என்கிற கெளரவமும் உங்களுக்கு கிடைச்சிடுச்சு. அதை தாண்டி உங்களுக்கும் எனக்கும் எந்த பந்தமும் இல்லன்னு நினைக்கிறேன்” என்று அழுத்தமாக மொழிந்தவளை இன்னும் கண்கள் இடுங்கப் பார்த்தான்.
அவனது பார்வையை எதிர்க் கொள்ளாமல்,
“இனிமே நான் உங்களுக்கு தேவை இல்லன்னு நினைக்கிறேன். ஏன்னா என்னால ஆகக்கூடிய காரியம் எல்லாம் நிறைவேத்தியாச்சு... இனி இது வெறும் பொம்மை தான். என்னால வேற எந்த தேவையையும் நிறைவேற்ற முடியாது இல்லையா” என்று சொன்னவள்,
“கிளம்புறேன்” என்றாள் அவனிடம்.
ராசசிங்கன் அசையவேயில்லை. அசையாத பார்வை அவளை பார்த்தான். அவனது பார்வையை கண்டு கொள்ளாமல்,
“விருந்து சாப்பிட்ட பிறகு எச்சி இலைக்கு என்ன மதிப்புன்னு எனக்கு நல்லாவே தெரியும். சோ என்னை விலக்கி வைக்கிற வேலை கூட உங்களுக்கு நான் வைக்கல” என்றவள்,
“இனி என்னால வேற ஒரு லைப் லீட் பண்ண முடியுமான்னு தெரியல” என்றவளுக்கு குரல் கரகரத்தது. அதை செருமி சரி செய்துக் கொண்டவள்,
“கல்யாணம் ஆனா நாள்ள இருந்து உங்ககிட்ட எனக்கு ஒன்னே ஒன்னு கிடைக்கணும்னு ரொம்ப ஆசை பட்டேன்” என்றவளுக்கு கண்ணீர் வந்து விடும் போல இருந்தது. அதை அடக்கிக் கொண்டு,
“ஆனா இதுவரை எனக்கு கிடைக்கல” என்றாள்.
“நீங்க எப்படி உங்க பிசினெஸ்க்காக சில அதிகாரிங்களுக்கு லஞ்சமா பெண்களை ஏற்பாடு செய்து குடுப்பீங்களோ அது மாதிரி எனக்கும் ஒரே ஒரு செயலை செய்துக் கொடுக்கணும்” என்றாள் தவிப்புடன்.
அப்பொழுதும் ராசசிங்கன் அசையவே இல்லையே... இரும்பு மனிதனாய் அப்படியே நிமிர்ந்து நின்றான்.
அவனது அசையாத நிலையை கண்டு, “இல்ல உங்களுக்காக என் சேர்ஷ் எல்லாம் கொடுத்து இருக்கேன் இல்லையா?” என்று தடுமாறினாள். ராசசிங்கனின் பார்வை இன்னும் கூர்மையானது.
“அந்த சேர்ஷ்க்கு பதிலா ஒரே ஒரு ...” என்று மேற்கொண்டு சொல்ல முடியாமல் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது. அதை எச்சில் கூட்டி விழுங்கியவள்,
“நெத்தி முத்தம் குடுக்க முடியுமா?” என்று கேட்டு விட்டாள்.
அதை கேட்பதற்கு பெரும் அவமானமாய் இருந்தது ஏந்திழையாளுக்கு.
ஆனால் அவளால் அதை கேட்காமல் அவனை விட்டு நீங்க முடியாது. அவளின் அழகான நினைவுகளில் இந்த முத்தம் தான் முதன்மையானதாக இருக்கும் என்று எண்ணியே கேட்டாள்.