பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏழை எளிய மக்களின் அரிய வழிகாட்டியாக ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களிடயே தோன்றி அம்மக்களை உயர்த்தப்பாடுபட்ட அமைதிப்புரட்சியின் விடிவெள்ளியாக கேரளத்தில் செம்பழந்தியில் அவதரித்தவர்தான் ஸ்ரீநாராயணகுரு. முற்றுந்துறந்த இம்மாமுனிவர் ஒரு சாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதர்க்கு, மதம் எதுவானாலும் மனிதன் நன்றானால் போதும் என மனிதத்தை முன்னிறுத்தி உபதேசித்த மனிதநேயவாதி, படிப்பு அனுபவமும் பயண அனுபவமும் நிரம்பப் பெற்றிருந்த ஸ்ரீநாராயணகுரு சமுதாயப்புரட்சியும் செய்த பேரருளாளராக இன்றும் உலக அளவில் கருதப்படுப்பவர்.